மாதவிடாய் காலத்தில் பெண்கள் இளநீரை குடிப்பது நல்லது- ஏன் தெரியுமா?

Published : Feb 22, 2023, 07:51 PM IST

உடலை சுத்தப்படுத்தவும், கழிவுகளை வெளியேற்றவும், கல்லீரலை குளிர்விக்கவும், ஆண்டி ஆக்சிடண்டுகளை செயல்படுத்தவும், பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் கூடிய பண்புகள் இளநீருக்கு உண்டு.  

PREV
13
மாதவிடாய் காலத்தில் பெண்கள் இளநீரை குடிப்பது நல்லது- ஏன் தெரியுமா?

தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து நம்மில் பலருக்கும் ஓரளவுக்கு தெரியும். ஆனால் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? உடலைச் சுத்தப்படுத்த மட்டுமின்றி, பல்வேறு வகையில் கழிவுகளை வெளியேற்றவும் இளநீர் பயன்படுகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் கூடிய பண்புகள் இளநீரில் காணப்படுகிறது. 

மாதவிடாய் காலத்தில் இளநீரை குடிப்பது பெண்களுக்கு மாதவிடாய் வலியைக் குறைத்து, மாதவிடாய் சுழற்சியை சீரான முறையில் பராமரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்களைத் தடுக்கவும், மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கான பண்புகளும் இளநீரில் இடம்பெற்றுள்ளன.
 

23

அதுமட்டுமில்லாமல் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கான மூலக்கூறுகளும் இளநீரில் உள்ளன. தேங்காய் நீரை தொடர்ந்து உட்கொண்டால் சருமத்தில் இளமை நீடித்திருக்கும். இதனால் வயோதிகம் சற்று தாமதமாக நிகழும். 

வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட, மனிதனுக்கு வேண்டிய அடிப்படை ஊட்டச்சத்துக்கள் முழுவதும் இளநீரில் உள்ளன. சில நேரங்களில், மாதவிடாயின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு அமினோரியா எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும். அதை தடுக்க இளநீரை சீரான இடைவெளியில் குடித்து வர வேண்டும். 

பெண்கள் உடலுறவை தவிர்ப்பதற்கான 5 காரணங்கள்..!!

33

பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அப்போது எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, இளநீரை பருகி வரலாம். இதனால் மாதவிடாய் நாட்கள் மென்மையாகவும் இலகுவாகவும் இருக்கும். தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதனால் மாதவிடாய் கால ரத்தம் சரியாக வெளியேற ஊக்குவிக்கிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories