இதற்கு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 4 ஸ்பூன் சோம்பு, 2 ஸ்பூன் ஓமம், 2 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். பிறகு அதை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அந்த பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1 ஸ்பூன் பிளாக் சால்ட் மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி காற்று போகாத ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைக்கவும். இந்த உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதுமானது.