ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள நிவாய் நகரத்தில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் நடந்த இந்த திருமண விழாவில் மணமகன் ஒன்றல்ல, இரண்டு மணப்பெண்களை திருமணம் செய்து கொண்டார். அந்த மணமகன் ஹரி ஓம், இவருக்கு வயது 23. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் யுனியாரா நகரம், மோர்ஜாலா-கி-ஜோன்பரியாவைச் சேர்ந்த காந்தா, சுமன் என்ற இருசகோதரிகளை மணந்துள்ளார்.