உங்கள் துணையின் நேர்மையை நீங்கள் சுட்டிக்காட்டி, சுருக்கமாக கேள்விகளை எழுப்புங்கள். இது தவறு செய்தவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டும். அதன்காரணமாகவும் திருமணத்தை மீறிய உறவை அவர் ஒப்புக்கொள்வார். “பொய் வேண்டாம், நான் உங்களிடம் பொய் சொன்னதே இல்லை” என்கிற உங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி, அதுசார்ந்த பதிலை வாங்கப் பாருங்கள். ஏதோ குற்றம் செய்தவர் போன்று துணை உணரச்செய்வதில் எந்த பயனும் இல்லை. இதை நீங்கள் துரோகமாக கருதும்பட்சத்தில், குற்றத்தை மெதுவாகத்தால் வெளியில் கொண்டுவர முடியும். மேலும் நீங்கள் அளந்து “ஊசி” போல பேசினால் தான், துணையின் பதில் விரிவாக வரும்.