தண்ணீர் குடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாது. ஏனெனில் அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணமாக, வயிற்றில் உள்ள அமிலங்கள் கரைந்து வயிற்றில் வாயு உருவாகும். செரிமானத்தை மந்தமாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.