Skin care: முகத்தில் வந்த கரும்புள்ளிகளால் வருத்தமா..? விரைவில் மறைய இதோ வழிகள்!

First Published Dec 27, 2022, 2:57 PM IST

கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான முகத்தை பெறுவதை பலர் விரும்புவர். ஆனால் சிலரே அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வர். அவர்களுக்கான எளிய வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

blackheads

முகத்தின் காணப்படும் பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்பட சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவது, மாத்திரைகள் எடுத்து கொள்ளுதல், ஹார்மோன் சமச்சீரின்மை ஆகியவைகளும் காரணமாக இருக்கலாம். கரும்புள்ளிகள் பருக்களை போல வலியை ஏற்படுத்தாது; ஆனால் முகத்தின் அழகையே சிதைத்துவிடுகிறது. நமது சருமத்தில் காணப்படும் மயிர்க்கால்களில் (Follicles) இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை சேரும்போது குமிழ் போல உருவாகுகிறது. இது காற்றோடு வினைபுரியும்போது கரும்புள்ளிகளாக மாறுகிறது. இதை தடுக்க சில வழிகள் உள்ளன. 

சுகர் ஸ்கரப் 

தேங்காய் எண்ணெய்யில் கொஞ்சமாக சர்க்கரையை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். மாற்றத்தை உணருவீர்கள். 

tomato

ஆயில் ஸ்கின் ஸ்கரப் 

ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த முறை ஏற்றது. தக்காளி சாற்றை கரும்புள்ளிகள் மீது பூசிவிட்டு காயும் வரை விடவும். சில நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரால் கழுவி கொள்ளலாம். 

Steam

நீராவியால் உண்டாகும் மாயம் 

முகத்தில் நீராவி படும்போது சருமத்தில் படிந்துள்ள அழுக்கு நீங்குகிறது. ஆவி பிடித்த பிறகு முகத்தை துணியால் துடைத்தால் கரும்புள்ளிகள் நீங்கும். 

women with towel

குளியலுக்கு பிறகு...

தினமும் குளியலுக்கு பின்னர் துண்டால் (towel) கரும்புள்ளிகள் உள்ள இடத்தை துடைத்து வரவும். இதனால் சருமத்தில் உள்ள மயிர்க்கால்களில் அழுக்கு படிவதை தவிர்க்க முடியும். 

scrub

பேக்கிங் சோடா 

ஒரு கரண்டி முழுவதும் பேக்கிங் சோடாவை எடுத்து கொண்டு, அதனுடை பாதி தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போன்ற பதத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீருடன் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் பூசி விட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தைக் கழுவி கொள்ளுங்கள். தொடர்ந்து செய்து வர கரும்புள்ளி இல்லாத பளபளப்பான சருமத்தை பெறுவீர்கள். 

click me!