பூசணி விதை எண்ணெயை நேரடியாக எடுத்து உங்கள் முடியின் பாகங்களில் சமமாகப் பரப்பவும். தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, முடியின் வேர்க்கால்களிலிருந்து நுனி வரை தடவ வேண்டும். இரவில் இந்த எண்ணெயை முடிக்குத் தடவி, மறுநாள் தலைக்குக் குளித்தால் போதும். இப்படி தொடர்ந்து செய்வதால், உங்கள் முடி அழகாக மாறும். எண்ணெயை குறைந்தது 12 முதல் 24 மணி நேரம் வரை முடிக்குத் தடவி அப்படியே விடுவதால், எண்ணெயில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் முடிக்குக் கிடைக்கும்.
எண்ணெயை முடிக்குத் தடவிய 12 மணி நேரத்திற்குப் பிறகு, நீங்கள் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை இந்த செயல்முறையைத் தொடர்ந்தால், நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம்.