1/4 கப் உலர்ந்த செம்பருத்தி இலைகளை 1.5 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
சுமார் 5 நிமிடம் கொதித்த பிறகு இறக்கி விடவும்.
பின்னர் அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் உங்கள் விருப்பத்திற்கு தகுந்த என்னையே எடுத்துக் கொள்ளவும். பின்
நன்றாக கலக்கவும்.
இதழ்களை வடிகட்டி, கலவையை சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்.
இதனை உலர்ந்த முடி, வேர்கள் மற்றும் முனைகளில் நேரடியாக தெளிக்கவும்.
பின் 1-2 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
உங்கள் தலைமுடியை ஷவர் கேப் மூலம் மூடி 1-2 மணி நேரம் வைக்கவும்.
உங்கள் தலைமுடியை வழக்கம் போல் ஷாம்பு போட்டு கண்டிஷனிங் செய்யவும்.
பாட்டிலை குளிர்சாதன பெட்டியில் வைத்து 1-2 வாரங்களுக்கு பயன்படுத்தவும்.
நல்ல பலனைப் பெற வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முடி பட்டுப்போல மென்மையாகவும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.