தீராத பண கஷ்டம் தீர வேண்டுமா..? அப்ப இந்த வாஸ்து டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!

First Published Jun 11, 2024, 10:04 AM IST

நீங்கள் பணப்பற்றாகுறையை எதிர்கொண்டால், வாஸ்து சாஸ்திரத்தின் பரிகாரங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அவற்றைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பல நேரங்களில் வாழ்க்கையில் கடினமாக உழைத்தாலும் ஒரு நபர் பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பணப்பற்றாக்குறை எதிர்கொண்டால் வாஸ்து சாஸ்திரத்தின் பரிகாரங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

வாஸ்து படி, வீட்டில் சில நல்ல விஷயங்களை வைத்திருப்பது ஒரு நபரை நிதி கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது. எனவே, எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Latest Videos


துளசி செடியை வீட்டின் பிரதான வாயிலில் வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி, இதை செய்தால் நிதி நிலைமை மேம்படும். இது தவிர, வீட்டின் கிழக்கு (அ) வடக்கு திசையில் துளசி செடியை வைப்பது நல்லது.

சனாதன தர்மத்தில், விநாயகப் பெருமான் விசேஷமாக வழிபடப்படுகிறார். அவருடைய அருளால் ஒருவர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெற முடியும் என்பது நம்பிக்கை.. வீட்டில் விநாயகர் சிலை வைத்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை செழிப்பையும் தருவது மட்டுமின்றி, வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியை நிலவச் செய்யும்.

ராமரின் தீவிர பக்தரான அனுமான் கலியுகத்தின் விழித்தெழுந்த கடவுளாக கருதப்படுகிறது. உங்கள் பொருளாதார நிலை வலுப்பெற வேண்டுமானால், பஞ்சமுகி அனுமான் புகைப்படத்தை தென்மேற்கு திசையில் வீட்டில் வைத்து தினமும் வழிபடுங்கள். இவ்வாறு செய்து வந்தால் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க:  கற்பூரத்தை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைங்க; பணத்திற்கு ஒருபோதும் தட்டுப்பாடு வராது!

குபேரர் செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறார். இந்து மத நம்பிக்கையின்படி, குபேரரின் ஆசீர்வாதத்தால் ஒரு நபர் வாழ்க்கையில் ஒருபோதும் பணத்தட்டுப்பாட்டை சந்திப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் குபேரர் படத்தை வையுங்கள். மேலும், குபேரரின் சிலையையும் வைத்தால், நிதி நெருக்கடி ஏற்படாது.

இதையும் படிங்க:  Vastu Tips : பணத்தை எண்ணும் போது இந்த தவறை செய்யாதீங்க.. துரதிஷ்டம் வரும்!

அனைத்து தெய்வங்களும் வடக்கிழக்கு மூலையில் குடியிருந்தால் நல்லதாக கருதப்படுகிறது. எனவே,  வீட்டின் பூஜை அறையை வடகிழக்கு மூலையில் வையுங்கள். இது தவிர வீட்டின் கிழக்கு திசையில் ஸ்வஸ்திகா சின்னம் இருக்க வேண்டும். வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் தினமும் வீட்டில் கற்பூரம் கொளுத்த வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!