மே 1 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் குரு; பண மழையில் நனைய தயாராக இருங்கள்!

First Published Apr 12, 2024, 9:58 AM IST

செல்வம் மற்றும் அறிவு ஆகியவற்றின் அதிபதியான குரு மே 1ஆம் தேதி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதனால் 4 ராசிகளுக்கு அளப்பரிய பலன் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் இதோ..

குரு நன்மை செய்யும் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் வியாழனின் நிலை சுபமாக இருந்தால், அது மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தின்படி, குரு ஞானம், செழிப்பு மற்றும் புகழ் ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். 

இந்நிலையில், மே 1ஆம் தேதி பிற்பகல் 2.29 மணிக்கு வியாழன் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் 4 ராசிகளுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

மேஷம்: இந்த ராசிக்கு குரு பலவிதமான வசதியை அளிக்கப் போகிறார். இவர்கள் பல்வேறு மூலங்களிலிருந்து செல்வத்தை சம்பாதிப்பார்கள். புதிய வழிகள் திறக்கப்படும். இதன் காரணமாக நிதி ஆதாயம் உருவாகும், சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இது நல்ல காலம். இந்த நேரத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.
 

ரிஷபம்: இந்த ராசிக்கு குரு நல்ல பலனைத் தரப் போகிறார். நிதி லாபம் கிடைக்கும். வேலைக்குத் தகுந்த வருமானம் கிடைப்பதுடன், பொருளாதார முன்னேற்றம் பெறுவார்கள்.  காதலிப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல நேரம். திருமணம் வரன் அமையும்.

கடகம்: இந்த ராசிக்கு குரு நன்மையை அளிப்பார். நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள தடைகள் அனைத்தையும் குரு நீக்குவார். வியாபாரம் வெற்றியை நோக்கி நகரும் மற்றும் நிதி நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கையின் பல்வேறு வழிகளில் வெற்றி பெறுவீர்கள். 

மகரம்: இந்த ராசியின் கையை குரு பிடிக்கப் போகிறார். இது இவர்களுக்கு நல்ல பலன் தரும். வருமானத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். நிதி உயர்வு சாத்தியமாகும். தொழில் செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

click me!