ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..

Published : Oct 21, 2023, 03:42 PM IST

மதுபானம் தொடர்பான புதிய விதிகளை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதை எடுத்துக்கொள்வதற்கு முன் உடனடியாக விவரங்களை சரிபார்க்கவும்.

PREV
15
ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..
Indian Railway passenger alert

விமானங்களில் மதுவை எடுத்துச் செல்லவும், குடிக்கவும் அனுமதிப்பது போல், ரயில்வேயிலும் இது போன்ற விதி உள்ளதா என்ற கேள்வி ரயில்வே பயணிகளின் மனதில் அடிக்கடி எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களைத் தெரிந்து கொள்வோம்.

25
Indian Railway

பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயிலில் சில பொருட்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வே அனுமதிப்பதில்லை, அதில் மதுவும் அடங்கும். இந்த விதியை பயணிகள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் மது அருந்தி பயணம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

35
passenger alert

அவ்வாறு செய்தால், பயணிகளுக்கு எதிராக, ரயில்வே சட்டம் 1989, பிரிவு 165ன் கீழ், 500 ரூபாய் வரை அபராதம் மற்றும் 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அடங்கும். கூடுதலாக, பயணிகளின் டிக்கெட்டையும் ரத்து செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

45
Indian Railways Rules

பீகார், குஜராத், மிசோரம் மற்றும் நாகாலாந்து போன்ற சில மாநிலங்களில் மதுவிலக்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், பயணிகள் மதுவுடன் பிடிபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர். விதிகளின்படி,  ரயிலில் எந்த வகையான மதுபானங்களையும் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

55
alcohol regulations

ரூ 500 வரை அபராதம் மற்றும்/அல்லது 6 மாதங்கள் வரை சிறை. மது போதையில் பிடிபட்டால் டிக்கெட் ரத்து செய்யப்படலாம். தடை செய்யப்பட்ட மாநிலங்கள் பின்வருமாறு, பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து ஆகும்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories