இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளை பிடிக்க அதிரடி முடிவு..!

First Published Jan 23, 2024, 1:56 PM IST

வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

dmk mla karunanidhi

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். இவரது மனைவி மெர்லினா, தனது வீட்டில் பணிபுரிந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பட்டியலின பெண் ரேகாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

Scheduled Caste Girl

மேலும் ஆடைகளை களைந்து அடித்து துன்புறுத்தியதாகவும், சிகரெட்டால் சுட்டு சித்ரவதை செய்தாகவும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கண்ணீர் மல்க பேசிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். 

இதையும் படிங்க;- திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் தலித் மாணவி சித்திரவதை.. ஒருத்தரையும் சும்மாவிடக்கூடாது.. கொந்தளிக்கும் ராமதாஸ்.!

Latest Videos


Police Case

வீட்டு வேலைக்காக சென்ற சிறுமியை தாக்கி கொடுமைப்படுத்தி கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.  

3 special forces

இந்நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மறறும் அவரது மனைவி மெர்லினாவையும் பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  கொடுமைப்படுத்தியதை சொல்லி கதறும் ரேகா! நெஞ்சை உலுக்குகிறது! ஆளுங்கட்சி எம்எல்ஏ மகனுக்கு எதிராக திமிரும் திருமா

click me!