ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திர வேடம் என எந்த வேடம் கொடுத்தாலும், அசராமல் நடிக்கும் வித்தகன் தான் விஜய் சேதுபதி. அதிலும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் எதார்த்தமாக அவர் பேசும் டயலாக் சான்ஸே இல்லை! இதனால் தான் பாலிவுட், டோலிவுட் , மாலிவுட் என பிற மொழி இயக்குனர்கள் இவரை கமிட் செய்ய ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம்.
இந்த படத்தில் முதலில் பிரபல இளம் நடிகர் கெளதம் கார்த்தியை தான் ஹீரோவாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்ததாம், ஆனால் ஒரு சில காரணங்களால் கெளதம் கார்த்தி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டு, வேறு ஒரு படத்தில் கவனம் செலுத்தியுள்ளார். இதன் பின்னரே விஜய் சேதுபதியை இந்த படத்தின் உள்ளே கொண்டு வந்துள்ளது படக்குழு.
மேலும் விஜய் சேதுபதியை நேரில் பார்த்தபோதும் இப்படத்திற்காக அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு தற்போது வரை ஒரு சகோதரர்கள் போலவே இருந்து வருகிறார்கள். மேலும் இருவரும் இணைந்து 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்' என்கிற படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.