Maamanithan
விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட கால தாமதத்திற்கு பிறகு 'மாமனிதன்' திரைப்படம் ஜூன் 24 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சீனு ராமசாமி இயக்கிய எமோஷனல் குடும்ப நாடகம் என இயக்குனர் ஷங்கர் உட்பட பல திரையுலக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
Maamanithan
திரைப்படத்தின் கதை ஒரு தாய் மற்றும் மனைவியாக தனது குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கும் ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதை 'பெரிய திரையில் மெகா சீரியல்' என குறிப்பிட்டு இருந்தார். மாமனிதன் என டைட்டில் வைத்ததையும் அவர் தாக்கி பேசி இருந்தார்.
Maamanithan
மேலும் இந்த படத்தில் வருவது போல எந்த அப்பாவாவது மகள் திருமணத்திற்கு நகை வாங்க மகள் இல்லாமல் தனியாக போவாரா என ப்ளூ சட்டை கேள்வி எழுப்பி இருந்தார். ட்விட்டரில் இதற்கு பதிலளித்துள்ள சீனு ராமசாமி, மாறனை குறிப்பிட்டு இனிய மாறா வணக்கம், ''மனிதனை கொல்லலாம், ஆனால், மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது'' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இதனை ரீட்விட் செய்த மாறன், ''மாமனிதனை இம்மண்ணில் மனிதர்கள் கொண்டாடுகிறார்களா..? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்'' என்று பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க...Roja Serial Sibbu: ரோஜா சீரியலில் இருந்து நான் வெளியேறுகிறேன்....உருக்கத்துடன் "குட்பை'' சொன்ன அர்ஜுன் சார்.