மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என்பதால், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய 8 பேரில் விசித்ரா, அர்ச்சனா, மணி ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் அவர்கள் ஈஸியாக காப்பாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கு அடுத்து இருக்கும் ரவீனா, பிராவோ, அக்ஷயா, மாயா, பூர்ணிமா ஆகிய 5 பேருக்கும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளது. இதனால் இந்த வார எவிக்ஷனில் செம்ம டுவிஸ்ட் காத்திருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.