Andrea Jeremiah: சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய திருமணம் குறித்தும், தன்னுடைய சினிமா துறை அனுபவங்களையும் ஓப்பனாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்து, தமிழ் சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு தன்னுடைய பயணத்தை துவங்கினார்.
28
Andrea Jeremiah
தன்னுடைய குரல் வளத்தால் பின்னணி பாடகியாக கலக்கி வந்தார். இதையடுத்து, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
38
Andrea Jeremiah
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபன் இரண்டு பாகங்கள், வடசென்னை என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டி சென்றார்.
48
Andrea Jeremiah
இதையடுத்து, ஹாரர் மூவியை தேர்ந்தெடுத்து வரும் ஆண்ட்ரியா, இணையத்தில் அவ்வப்போது பரப்பை ஏற்படுத்தும் செய்திகளை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.சமீபத்தில் புஸ்பா படத்தின் ஓ சொல்றிய மாமா பாட்டின் தமிழ் வரிகளுக்கு இவர் பாடி இருந்தது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
58
Andrea Jeremiah
சினிமாவில் வெற்றி நாயகியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பெரிய துயரத்தை சந்தித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் அரசியல் வாதி ஒருவர் தனது வாழ்க்கை சீரழித்து விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
68
Andrea Jeremiah
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய திருமணம் குறித்தும், தன்னுடைய சினிமா துறை அனுபவங்களையும் ஓப்பனாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
78
Andrea Jeremiah
இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது திருமணம் குறித்த கேள்விக்கு, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க என்றார். மேலும், கல்யாணம் பண்ண வேண்டும் என்பதற்காக ஒருத்தரை திருமணம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
88
Andrea Jeremiah
அதுமட்டுமின்றி, பொல்லாதவன் படத்திற்கு முன்பு வெற்றிமாறன் என்னை சந்தித்த போது, வேறொரு கதை வைத்திருந்தார். அப்போது எனக்கு நடிக்க ஆசை எதுவும் இல்லாததால் அந்த முயற்சி அப்படியே நின்று விட்டது. அதன் பிறகு ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு டப்பிங் பேசினேன். அடித்து வட சென்னை படத்தில் வெற்றி வேற மாதிரி இருந்தார். இனி வட சென்னை 2 வுக்கு தான் வெயிட் பண்ணிறேன் என்றார்.