மேலும் பாலிவுட் உலகில் "கர்ணா" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அதற்கு இடையில் மீண்டும் இயக்குனர் சுதா கொங்காரவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டாக் லைன் "புறநானூறு" என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தலைப்பு பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மார்ச் மாதம் நடுப் பகுதியில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், மலையாள நடிகை நஸ்ரியா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார்.
சண்முகத்தின் தங்கைகளிடம் தர்ம அடி வாங்கிய முத்துப்பாண்டி - அண்ணா சீரியலில் அதிரடி திருப்பம்!