கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராஜ்கிரண், மூத்த தமிழ் நடிகை ரேவதி நடிப்பில் வெளியான "பா. பாண்டி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது தடத்தை தமிழ் திரையுலகில் பதித்தார் தனுஷ். அந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய ஐம்பதாவது திரைப்படம் அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படமாகும்.