கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24). இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்துவிட்டனர்.