திருவாரூர் அருகே உள்ள தண்டலை வடக்குத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் இளைய மகன் அஜித் (28). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். திருவாரூர் அருகே உள்ள கேக்கரை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகள் மதுமிதா (29). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக அஜித்துடன் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாகவும் மாறியுள்ளது.