இந்நிலையில், அகிலாவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தை சிகப்பாக பிறந்ததால் அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார். பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு அடுத்த குழந்தையும் சிகப்பாக பிறந்ததால் ஐயப்பனின் சந்தேகம் மேலும் அதிகரித்தது. இதனால், ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். பொறுமை இழந்த மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றார். பின்னர், அவரது பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.