இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பவனம் கடற்கரையில் துர்காதேவியுடன் மருத்துக்கல்லூரி மாணவர் அருண் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது துர்காதேவி, அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது துர்காதேவி, பணம் தராவிட்டால் கள்ள உறவை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார்.