திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரின் மனைவி தமயந்தி. தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோபிக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.