என்னவோரு வெறி! கணவனின் தலையில் கல்லை போட்ட மனைவி! ஆத்திரம் தீராததால் ஆணுறுப்பை அறுத்து என்ன செய்தார் தெரியுமா?

First Published Jun 9, 2023, 3:51 PM IST

காஞ்சிபுரத்தில் கணவனை கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்து விட்டு 6 மாத கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர். வேண்டா தற்போது 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். 

இந்நிலையில், சந்தானத்திற்கும் வேண்டாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் மனைவி சண்டையை இரண்டு குடும்பத்தினர் சமாதானம் செய்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல மீண்டும் சந்தானத்திற்கும் வேண்டாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனைவி தூக்கி கொண்டிருந்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார். மேலும், வெறி அடங்காததால் கத்தியால் சந்தானத்தின் கழுத்து, ஆணுறுப்பை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, போலீசாருக்கு பயந்து வேண்டாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனின் ஆணுறுப்பை அறுத்து கொலை கொடூரமாக கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!