12 நாட்களுக்கு முன்பு, பண்டிகைக்காக அமிர்தா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஏப்ரல் 16 ம் தேதி அன்று தன் மனைவியின் ஊருக்குச் செல்வதாக ஜவரப்பா தனது சகோதரர் ரவியிடம் கூறியுள்ளார். ஆனால், அன்று ஊருக்குச் சென்ற ஜவரப்பா மீண்டும் கிராமத்திற்குத் திரும்பவில்லை. மறுநாள் காலை சுமார் 6:30 மணியளவில், அவரது உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்டது.