தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்தவர் சிவக்குமார்(52). இவரது மகன் பிரதீப் (27). இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். இவருக்கு சின்னமனூரை சேர்ந்த நிகிலா(32) என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் முத்தையன்செட்டிபட்டியில் வசித்து வந்த நிலையில், பிரதீப் அமமுக கட்சியில் கிளைச் செயலாளராக இருந்த நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரதீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.