இதனால், காரின் பின்பக்க கதவு டோர் லாக் ஆனதால் பின்னால் அமர்ந்த அமர்ந்திருந்தவர்கள் வெளியே வர முடியவில்லை. இதனையடுத்து, பயங்கர ஆயுதங்களுடன் ஸ்கார்பியோ காரில் இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை வெட்ட முயன்றது. உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.