தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார்(52). இவரது மகன் பிரதீப் (27). இவருக்கும் சின்னமனூரை சேர்ந்த வழக்கறிஞர் நிகிலாவிற்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிகிலா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.