இந்த கொலை சம்பவம் தொடர்பாக லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் லட்சுமிக்கும், அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனையும், அவரது நண்பர் சிவராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் சிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.