இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருந்த போது
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதா கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சுவேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், ராமச்சந்திரனும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.