55 வயசுல கள்ளக்காதல் தேவையா? கைவிட மறுத்து நள்ளிரவில் ரோட்டில் மாமியார் செய்த காரியம்.. நேரில் பார்த்த மருமகன்

Published : Mar 14, 2023, 10:10 AM IST

கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார் மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஆத்திரத்தில் மருமகன் டிராக்டர் ஏற்றிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
15
55 வயசுல கள்ளக்காதல் தேவையா? கைவிட மறுத்து நள்ளிரவில் ரோட்டில் மாமியார் செய்த காரியம்.. நேரில் பார்த்த மருமகன்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (55).  இவரது கணவர் ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தன் தங்கை சித்ராவின் மகள் சீதாவை வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தங்கை மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (36) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்பழகன் விவசாயம் செய்து கொண்டு கரும்பு டிராக்டர் ஓட்டி வந்தார். 

25

இந்நிலையில் அன்பழகனின் உறவினரான செல்லத்துரை (55) என்பவருடன் கொளஞ்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து கொண்டு கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். 

35

இதையறிந்த மருமகன் மாமியார் கொளஞ்சியை பலமுறை கண்டித்துள்ளார். இதனால், முருகேசனுக்கும், செல்லத்துரைக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், மருமகன் சொல்வதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். 

45

இந்நிலையில், இரவு 11 மணிக்கு  வீட்டின் அருகே கொளஞ்சியமும், செல்லத்துரையும் பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த மருமகன் அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்று இருவர் மீதும் ஏற்றியுள்ளார். இதில்,  கொளஞ்சியம், செல்லத்துரை இருவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

55

இதனையடுத்து, நடந்த சம்பவத்தை கூறி டிராக்டருடன் அன்பழகன் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொளஞ்சியின் சொத்துக்கள் செல்லத்துரைக்கு சென்று விடும் என்பதால் இருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories