விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மாரிமுத்து (35), வீரமுத்து (32). இவருக்குமே திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இதில் வீரமுத்து லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஜெயங்கொண்டானில் இருந்து தனது வீட்டுக்கு வீரமுத்து நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை திடீரென வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.