ஆனால், சங்கர் கத்தியை வைத்திருந்ததால் தன்னை கொலை செய்ய வந்தவர்களை திருப்பி தாக்க முயன்றுள்ளார். இதனால், அவரை வெட்ட முடியாமல் சுத்து போட்டியுள்ளனர். அப்போது, கொலை கும்பல் ஓட்டி வந்த கார் அவரை பின் பக்கமாக இடித்து தள்ளியது. இதனால், சரிந்து கீழே விழுந்த அவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு கட்சி கொடி கட்டிய காரில் தப்பித்துள்ளனர்.