இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் ஜாபரை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழித்துள்ளார். மேலும், சந்திப்பதை தவிர்த்துவிட்டு செல்போனை சுவிட்ச்ஆப் செய்துள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறியதை அடுத்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.