மாமியாரை மடக்க நினைத்து ஓயாமல் பாலியல் சீண்டல்! வெந்நீரில் மிளகாய் பொடி கலந்து மருமகன் கொலை!தாலியை அறுத்த மகள்

First Published Mar 17, 2023, 9:15 AM IST

மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகன் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் அடுத்த பாரதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் செல்வராஜ்(27). இவர் டயானாமேரி என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இதே தெருவில் உள்ள மாமியார் இன்னாசியம்மாள் (40) வீட்டிலேயே  மனைவியுடன் செல்வராஜ் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மாமியாரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்த பிறகும் திருந்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த செல்வராஜ் மாமியாருக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி டயானா மேரி மற்றும் மாமியார் இன்னாசியம்மாள் இருவரும் சேர்ந்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் செல்வராஜ் மீது ஊற்றிவிட்டார். இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். 

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மனைவி ஊற்றிய வெந்நீரில் அவரது அடிவயிற்றில் பட்டு கிட்னி பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக டயானாமேரி இன்னாசி அம்மாள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!