இந்நிலையில், இரவு கந்தனின் வீட்டில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதனால், என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, கந்தன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.