தனது செல்போனை மருத்துவக்கல்லூரி மாணவி கேட்ட போது, பெங்களூரு வந்து வாங்கிச் செல்லுமாறு புருஷோத்தம் கூறியுள்ளார். அதன்படி, அந்த இளம்பெண்ணும் ஜூன் 6-ம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். இதையடுத்து கிரிநகரில் உள்ள தன்னுடைய நண்பர் சேத்தன் வீட்டுக்கு இளம்பெண்ணை புருஷோத்தம் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணுடன் புருஷோத்தம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.