ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்! 23 வயது இளைஞருடன் சேர்ந்து 39 வயது ஜோதி என்ன செய்தார் தெரியுமா?

Published : Aug 17, 2023, 09:58 AM IST

கள்ளக்காதலனை அடித்தே கொன்ற அங்கன்வாடி மைய ஆசிரியை மற்றும் அவரது தங்கை மகன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

PREV
14
ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்! 23 வயது இளைஞருடன் சேர்ந்து 39 வயது ஜோதி என்ன செய்தார் தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (39). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

24

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த லாரி ஓட்டுநரான வெங்கடேஷ்(40) என்பவருக்கும் ஜோதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனிடையே ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் மூலமாக தெரியவந்ததை அடுத்து ஹரீஷ் தனது பெரியம்மாவை கண்டித்துள்ளார். 

34

இதனால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஜோதியின் வீட்டிற்கு வெங்கடேஷ் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஹரீஷ்  எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? ஆவேசமாக கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் சேர்ந்து கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயமடைந்தார்.

44

இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜோதி மற்றும் ஹரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

click me!

Recommended Stories