இதில் விக்னேஷ் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். டியூசனுக்கு வந்த இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.