இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மருத்துவர் கார்த்திக் செல்போனில் மாணவியை தொடர்புகொண்டு அழைத்துள்ளார். இதனையடுத்து மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் இரண்டு வீடுகளுக்கு சென்று பிசியோதெரபி செய்த நிலையில் ஒரு பெண்ணிற்கு பிசியோதெரபிஸ்ட் செய்ய வேண்டும் என கூறி அம்மாணவியை அவரது காரில் ஏற்றி சென்றிருகிறார். அப்போது காரில் இருந்த குளிர்பானத்தை எடுத்து கார்த்திக் மாணவிக்கு குடிக்க கொடுத்துள்ளார்.