இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.