இன்ஸ்பெக்டர் பொண்டாட்டியை நிர்வாணப்படுத்தி கொள்ளையர்கள் செய்த காரியம்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

Published : Mar 23, 2023, 12:13 PM ISTUpdated : Mar 23, 2023, 12:58 PM IST

சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு 40 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிச்சென்ற சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

PREV
15
இன்ஸ்பெக்டர் பொண்டாட்டியை நிர்வாணப்படுத்தி கொள்ளையர்கள் செய்த காரியம்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

சென்னை அரும்பாக்கத்தில் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கங்கா (70). இவரது கணவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர். கணவர் இறந்துவிட்டதால் அரும்பாக்கத்தில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி மகனும், மருமகளும் வேலைக்கு சென்ற நிலையில் கங்கா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். 

25
Porn video

அப்போது, 5 பேர் வந்து கதவை தட்டியுள்ளனர். கங்கா கதவை திறந்து பார்த்த உடனே அந்த கும்பல் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த கங்கா அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கி கை, கால்களை கட்டி, வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர். பின்னர், அந்த கும்பல் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம்  கொள்ளையடித்துள்ளனர். பின்னர்,  கங்காவை நிர்வாணப்படுத்தி அதை செல்போனில் வீடியோ எடுத்து சென்றுள்ளனர். 
 

35

இதையடுத்து, வேலைக்கு சென்று வீடு திரும்பிய மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு ததகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போது மகாதேவனின் கடையில் வேலை செய்யும் மணிகண்டன் இந்த சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது. 

45

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது  பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், மகாதேவன் நடத்தி வரும் கடையில் மணிகண்டன் வேலை செய்து வந்துள்ளார். 

55

இவருக்கு 7 மாத சம்பளம் பாக்கி இருந்ததால் பலமுறை சம்பளப் பாக்கியை தரும்படி மகாதேவனிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து  தாயாரை சரமாரியாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. 

click me!

Recommended Stories