இவர்களுக்கு தண்டபாணியின் தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த தண்டபாணி கடும் ஆத்திரத்தில் தாய் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுபாஷ் மற்றும் தாய் கண்ணம்மாவையுத் வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மருமகளுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டி விழுந்தது. இதில், மகன் மற்றும் தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.