இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஸ்ரீநாத் (24), கார்த்திக் (25), சரவணன் (29), கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்திச்சென்று அவரை கொலை செய்து கல்லணை ஆற்றில் உடலை வீசிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி ரவிவர்மன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.