சிறுமியை சீரழித்த கொடூரம்! அந்தரங்க உறுப்பில் காயம்! வெறி தீராததால் உடல் முழுவதும் கடித்து சித்தரவதை.!

Published : Jul 29, 2023, 12:29 PM IST

12 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெறி தீராததால் பலமுறை கடித்து கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
சிறுமியை சீரழித்த கொடூரம்! அந்தரங்க உறுப்பில் காயம்! வெறி தீராததால் உடல் முழுவதும் கடித்து சித்தரவதை.!

மத்திய பிரதேச மாநிலம் சாட்னா  மாவட்டம் உள்ள மைஹார் அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி திடீரென காணவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சிறுமி மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

24
police

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

34

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமி கதற கதற முரட்டுதனமாக பலாத்காரம் செய்யப்பட்டு வெறி தீராததால் உடல் முழுவதும் கடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடுமையான காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.

44

இந்த சம்பவம் தொடர்பாக  ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories