கோவையை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூகவலைதளங்கள் மூலம் பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.