சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் லோகிதக்கன், காவலர் வெள்ளதுரை ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருசக்கர வாகனத்திற்கான ஆவணங்களை போலீசார் கேட்ட போது இந்த இருசக்கர வாகனம் தன்னுடைய உறவினருடையது என கூறியுள்ளனர்.