இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாப்பின் மனைவிக்கு தெரிய வந்ததை அடுத்து மைத்துனர்கள் கண்டித்து அறிவுரை வழங்கினர். இதனையடுத்து, பிரியாவுடனான தொடர்பை துண்டித்துள்ளார். செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போதும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், பிரியா ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று பாலூர் சாலையில் பிரதாப் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பிரியா பல பெண்கள் முன்னிலையில் பிரதாப்பை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.