உடலில் சூடு! குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்து குழந்தை கொலை.. காமவெறி பிடித்த தாய் சிக்கியது எப்படி?

Published : Jun 20, 2023, 03:22 PM IST

சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த குழந்தையை அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய  தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

PREV
16
உடலில் சூடு! குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்து குழந்தை கொலை.. காமவெறி பிடித்த தாய் சிக்கியது எப்படி?

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் செல்வபிரகாசம் (27). இவரது மனைவி லாவண்யா (25). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு  சர்வேஸ்வரன் (3) என்ற மகன் உள்ளார். கணவன் - மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவியின் பராமரிப்பில் சர்வேஸ்வரன் இருந்து வந்துள்ளார். 

26

இந்நிலையில், கடந்த ஜூன் 8ம் தேதி செல்வபிரகாசம், கெருகம்பாக்கத்தில் இருக்கும் லாவண்யா வீட்டிற்கு தனது குழந்தையை பார்க்க சென்றார். அப்போது, வீட்டில் லாவண்யா இல்லை. ஆகையால், அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் மகன் இறந்துவிட்டதாக சொன்ன தகவலை கேட்டு தந்தை அழுது கதறினார். இதனையடுத்து, குழந்தை இறந்த தகவலை தனக்கு தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்துவிட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், வேறு ஒருவருடன் மனைவி பழகி வருவதால் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

36
mangadu

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தை சர்வேஸ்வரன் விளையாடும்போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் சில தினங்களுக்கு முன்பு மயக்கமடைந்த சர்வேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்து விட்டதும் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

46
illegal love

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த குழந்தையின் உடலில் அதிகளவில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து,  லாவண்யா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கணவனை பிரிந்த லாவண்யா, கெருகம்பாக்கத்தில் மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு கீழ் தளத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

56

இவர்களின் கள்ளக்காதலுக்கு சர்வேஸ்வரன் இடையூறாக இருந்ததால் வீட்டிற்கு வரும் போதெல்லாம், குழந்தை உடலில் சூடு வைப்பது, குண்டூசியால் குத்துவது மற்றும் ஆத்திரத்தில் சர்வேஸ்வரன்  உடலில் எல்லாம் மணிகண்டன்  பல்லால் கடித்து வைத்துள்ளார்.

66

இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டிற்கு வந்தபோது சர்வேஸ்வரன் ஓடிவந்து இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்த போது ஆத்திரமடைந்து குழந்தையை தூக்கி வீசியதில், தலையில் காயம் ஏற்பட்டதில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து லாவண்யா மற்றும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Read more Photos on
click me!

Recommended Stories