சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ்(44). பிரபல ரவுடியான இவர் மீது ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி, வழிபறி, ஆட்கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 8 முறை போலீசார் குண்டர் சட்டத்தில் ஆற்காடு சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.